×

ஜெயங்கொண்டம் அருகே பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி சிறுமி பாலியல் பலாத்கார வழக்கில் 7 பேர் குண்டர் சட்டத்தில் கைது

ஜெயங்கொண்டம்: அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள உடையார்பாளையம் பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமி ஒருவரை அதே பகுதியை சேர்ந்த சாந்தா (30) என்பவர் வீட்டு வேலைக்கு கடந்த 3 மாதங்களுக்கு முன்பு அழைத்து சென்றுள்ளார். தொடர்ந்து, அந்த சிறுமியை மயக்க மருந்து கொடுத்து பலர் பலாத்காரம் செய்துள்ளனர். இதற்கு சிலர் உடந்தையாக இருந்துள்ளனர். இந்த வழக்கில் தொடர்புடையவர்களில் 4 பேர் ஏற்கனவே குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய சிறுமியை விபச்சாரத் தொழிலில் ஈடுபடுத்திய சாந்தா(35), இந்திரா(38), இந்திரா(40) ஆகிய 3 பேரும் மற்றும் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த தெய்வீகன்(49),  வெற்றி கண்ணன்(37), பிரேம் (23) மற்றும் மனோஜ் குமார்(49) ஆகிய 4 பேரும் என மொத்தம் ஏழு பேரையும் அரியலூர் எஸ்பி பெரோஸ் கான் அப்துல்லா ஆகியோரின் பரிந்துரையின் பேரில் ஒரு வருடம் குண்டர் சட்டத்தில் அடைக்க  மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி உத்தரவிட்டுள்ளார்.

Tags : Jayankondam , Seven persons have been arrested in connection with the rape of a girl near Jayankondam
× RELATED பெரம்பலூர் /அரியலூர் வீராக்கன்...