சென்னை: சட்டப்பேரவையில் மீண்டும் பேச அனுமதி கோரி அதிமுக உறுப்பினர்கள் தர்ணா போராட்டம் நடத்தியதால் அவர்களை குண்டுக்கட்டாக வெளியேற்ற சபாநாயகர் அப்பாவு உத்தரவிட்டுள்ளார். அவைக்கு குந்தகம் விளைவித்ததாக கூறி அவைக் காவலர்கள் மூலம் வெளியேற்ற சபாநாயகர் உத்தரவிட்டார். இதையடுத்து சட்டப்பேரையில் இருந்து அதிமுக உறுப்பினர்கள் வெளியேற்றப்பட்டனர். அவைக்குள்ளேயே அமர்ந்து முழக்கம் எழுப்பியதால் அவையில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது.