×

பள்ளித்தம்மம் செல்லும் சாலை சீராக்கப்படுமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு

காளையார்கோவில் : காளையார்கோவிலில் இருந்து காட்டாத்தி வழியாக பள்ளித்தம்மம் செல்லும் தார்ச்சாலை பல ஆண்டுகளாகக் குண்டும் குழியுமாகக் காட்சியளிக்கின்றது.எனவே, இச்சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.காளையார்கோவிலுக்கு அருகில் காட்டாத்தி வழியாகப் பள்ளித்தம்மம், வேம்பனி, அம்மாபட்டினம், உருவாட்டி என பல கிராமங்கள் உள்ளன. இப்பகுதிகளில் அதிக அளவில் விவசாயம் நடைபெற்று வருகிறது. இப்பகுதிகளில் விளையும் காய்கறி மற்றும் அதற்கான ஈடு பொருட்களை ஏற்றிச் செல்வதற்கும், மாணவ, மாணவிகள் பள்ளி, கல்லூரி மற்றும் உருவாட்டி அம்மன் கோயிலுக்கு செல்லவும் பள்ளித்தம்மம் செல்லும் சாலையை பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தி வருகின்றனர்.ஆனால், பல ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்ட இத்தார்ச்சாலை ஜல்லிக்கற்கள் பெயர்ந்து குண்டும், குழியுமாக உள்ளது. இச்சாலை வழியே நடந்து செல்பவர்களின் பாதங்களை கற்கள் பதம் பார்க்கிறது. மோசமான சாலையில் அடிக்கடி விபத்தும் நடைபெற்று வருகிறது. எனவே, இப்பகுதியில் உள்ள தார்ச்சாலையை உடனடியாக அமைத்துத் தருமாறு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்….

The post பள்ளித்தம்மம் செல்லும் சாலை சீராக்கப்படுமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு appeared first on Dinakaran.

Tags : Pallithammam ,Kalaiyarkovil ,Kalayarkovil ,Kattathi ,Dinakaran ,
× RELATED காளையார்கோவில் பகுதியில் காவிரி...