×

நீலகிரி மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகளில் விற்பனை செய்யப்படும் மது பாட்டில்களுக்கு ரூ.10 கூடுதலாக வசூல்

நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகளில் விற்பனை செய்யப்படும் ஒவ்வொரு மது பாட்டிலுக்கும் ரூ.10 கூடுதலாக வசூலிக்கப்படும். காலி மதுபாட்டிலை திரும்ப கொடுத்துவிட்டு, கூடுதல் தொகையான ரூ.10-ஐ திரும்ப பெற்றுக்கொள்ளுமாறு தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. சுற்றுலா பயணிகள் காலி மது பாட்டில்களை ஆங்காங்கே வீசுவதால் சுற்றுசூழல் பாதிப்பு ஏற்படுவதாக  சென்னைஉயர்நீதிமன்றம் கூறிய நிலையில் அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.


Tags : Tasmak ,Neilagiri district , Nilgiris, Tasmac store, sales, extra collections
× RELATED கடமலைக்குண்டு அருகே காட்டு யானைகளால்...