×

மதுரை - செகந்திராபாத் சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு

மதுரை: மதுரை - செகந்திராபாத் சிறப்பு ரயில் சேவை மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மதுரையிலிருந்து தெலங்கானா மாநிலம் செகந்திராபாத் நகருக்கு சிறப்பு ரயில் ஏப்ரல் மாதம் மட்டும் இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது இந்த ரயில் சேவை ஜூலை மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி செகந்திராபாத் - மதுரை வாராந்திர சிறப்பு ரயில் செகந்திராபாத்தில் இருந்து மே 2 முதல் ஜூலை 25 வரை திங்கட்கிழமைகளில் இரவு 9.25 மணிக்கு புறப்பட்டு மறுநாள் இரவு 8.45 மணிக்கு மதுரை வந்து சேரும்.

மறுமார்க்கத்தில் மதுரை - செகந்தராபாத் வாராந்திர சிறப்பு ரயில் மதுரையில் இருந்து மே 4 முதல் ஜூலை 27 வரை புதன்கிழமைகளில் அதிகாலை 5.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 7.25 மணிக்கு செகந்திராபாத் சென்று சேரும். இந்த ரயில்கள் திண்டுக்கல், திருச்சி, ரங்கம், விருத்தாச்சலம், விழுப்புரம், திருவண்ணாமலை, காட்பாடி, சித்தூர், திருப்பதி, ரேணிகுண்டா, கூடூர், நெல்லூர், ஓங்கோல், பாபட்லா, தெனாலி, குண்டூர், மிரியால்குடா, நலகொண்டா ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

இந்த ரயில்களில் மூன்று குளிர்சாதன மூன்றடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், 3 குளிர்சாதன அடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், 12 இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிகள், 4 இரண்டாம் வகுப்பு பொது பெட்டிகள், 2 ரயில் மேலாளர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான பெட்டிகள் இணைக்கப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

Tags : Madurai , Madurai - Secunderabad special train service extension
× RELATED சீசன் துவங்கியும் மாம்பழங்கள் வரத்து இல்லை