×

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து நாடு முழுவதும் காங். கட்சியினர் போராட்டம்..!!

ஹூப்ளி: பெட்ரோல், டீசல் விலை பல்வேறு பகுதிகளில் 100 ரூபாயை எட்டியுள்ள நிலையில் விலை உயர்வை கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பெட்ரோல், டீசல் விலை நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் நாட்டின் பல்வேறு பகுதிகளில் பெட்ரோல் விலை 100 ரூபாயை எட்டியுள்ளது. இந்நிலையில், பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். 
கர்நாடக மாநிலம் ஹூப்ளி பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க் முன்பு திரண்ட காங்கிரஸ் கட்சியினர், பெட்ரோல் விலை உயர்வை கண்டித்தும், ஒன்றிய பாரதிய ஜனதா அரசை கண்டித்தும் முழக்கங்களை எழுப்பினர். இதேபோல் கர்நாடகாவின் கல்புர்கி உள்ளிட்ட பகுதிகளிலும் பெட்ரோல் விற்பனை நிலையங்கள் முன்பு காங்கிரஸ் கட்சியினர் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 
பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் கார் ஒன்றை குதிரை வண்டியில் ஏற்றி காங்கிரஸ் கட்சியினர் தனது எதிர்ப்பை வெளிப்படுத்தினர். காருக்கு மாலையிட்டு இறுதி மரியாதை செய்த அவர்கள், காரை குதிரை வண்டியில் ஊர்வலமாக எடுத்து சென்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். 
இதேபோல் ஒடிசா மாநிலம் புவனேஸ்வரிலும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினர், ஒன்றிய அரசை கண்டித்து முழக்கங்களை எழுப்பினர். பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு அரசே பொறுப்பேற்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர். 

The post பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து நாடு முழுவதும் காங். கட்சியினர் போராட்டம்..!! appeared first on Dinakaran.

Tags : Congress ,Hubli ,Dinakaran ,
× RELATED மேற்கு வங்கத்தில் பாஜவுக்கு...