×

திருப்புவனத்தில் துணிகரம் :எஸ்ஐ வீட்டில் 10 பவுன் ரூ.35 ஆயிரம் கொள்ளை

திருப்புவனம்: திருப்புவனத்தில் எஸ்ஐ வீட்டு பூட்டை உடைத்து நகை, பணத்தை கொள்ளையடித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் வடக்கு ரத வீதியை சேர்ந்தவர் ராஜகோபால் இவர் மணிமுத்தாறில் எஸ்ஐயாக பணியாற்றி வருகிறார். இவரது மனைவிக்கு உடல்நலம் பாதித்தால் சிகிச்சைக்காக சென்னைக்கு அழைத்து சென்றார். நேற்று மாலை ராஜகோபால் வீடு திரும்பினார். அப்போது பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது, பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த 10 பவுன் நகை, ரூ.35 ஆயிரம் ரொக்கப்பணம் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது. இதுகுறித்து திருப்புவனம் போலீசில் புகார் செய்தார். சிவகங்கையில் இருந்து வந்த தடயவியல் நிபுணர்கள் தடயங்களை சேகரித்தனர். இதுகுறித்து திருப்புவனம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். ராஜகோபால் வீட்டின் அருகே சுகாதாரத்துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற கண்ணதாசன் என்பவரது வீடு உள்ளது. இவரது வீட்டை உடைத்து உள்ளே புகுந்த கொள்ளையர்கள் நகை, பணம் இல்லாததால் ஏமாற்றத்துடன் திரும்பியுள்ளனர்.

Tags : Tirupwanam , 10 pound ,Rs 35,000 robbery , SI house
× RELATED அழகர்கோவில் 18ம்படி...