×

பாளையங்கோட்டை பஸ் நிலையத்தில் நாட்டு வெடிகுண்டு வீசிய 2 பேரிடம் விசாரணை: சுவரில் ஓட்டை விழுந்தது

நெல்லை: பாளையங்கோட்டை  பஸ் நிலையத்தில் உள்ள ஒரு  டீக்கடை அருகே இருந்து கீழ் தளத்திற்கு செல்லும் பாதையில் நேற்று முன்தினம்  நள்ளிரவு சுமார் 11.30 மணிக்கு திடீரென குண்டு வெடிக்கும் சத்தம் கேட்டது.  இதனால் அப்பகுதியில் இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அங்கு சென்று பார்த்த போது 2 பேர்  அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். தகவல்  அறிந்து நெல்லை மாநகர போலீசார் வந்து விசாரணை நடத்தினர்.  இது ெதாடர்பாக பாளை. அடுத்துள்ள மணக்கரையைச் சேர்ந்த சுடலை (25) மற்றும்  நொச்சிகுளத்தை சேர்ந்த கிருஷ்ணன்(24) ஆகியோரை நேற்று பிடித்து விசாரணை  செய்து வருகின்றனர்.  இவர்கள் இருவரும் பாளை பஸ் நிலைய வளாகத்தில் உள்ள  டீக்கடையில் பணி செய்கின்றனர். பாளையில் நடந்த ஒரு கோயில்  திருவிழாவில் வெடிக்கப்பட்ட பட்டாசுகளில் வெடிக்காதவைகளை எடுத்து வந்து  ஒன்றாக்கி அது வெடிக்கிறதா என சுவற்றில் வீசி சோதித்து பார்த்ததாக  கூறப்படுகிறது. இது தொடர்பாக இருவரிடமும் போலீசார் தொடர்ந்து விசாரிக்கின்றனர்.

Tags : Palayankottai , Investigation into 2 persons who threw a country bomb at Palayankottai bus stand: A hole fell in the wall
× RELATED பாளையங்கோட்டை சிறையில் விசாரணை கைதி உயிரிழப்பு..!!