கோவை: கோவை பாரதியார் பல்கலைக்கழக மகளிர் விடுதியில் மர்ம நபர் சுற்றித் திரிந்த வீடியோ வெளியான விவகாரம் குறித்து பல்கலைக்கழக பதிவாளர் முருகவேல் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தினர். விடுதி அறையின் ஜன்னலை உடைத்து லேப்டாப் திருட முயன்றபோது மாணவி விரட்டியதால் தப்பியோட்டம் என புகார் அளிக்கப்பட்டது.