×

பொது கழிப்பறைக்குள் சென்ற 12 வயது சிறுமியை பலாத்காரம் செய்த 13 வயது சிறுவன்: போக்சோ சட்டத்தில் அதிரடி கைது

புனே: புனேயில் பொதுக்கழிப்பறைக்குள் சென்ற 12 வயது சிறுமியை பலாத்காரம் செய்த 13 வயது சிறுவனை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்துள்ளனர். மகாராஷ்டிர மாநிலம் புனே ரயில் நிலையம் அருகே பண்ட் கார்டன்  பகுதியில் உள்ள பொதுக் கழிப்பறையில் இயற்கை உபாதைகளை கழிப்பதற்காக 12 வயது சிறுமி சென்றார். அவரை பின்தொடர்ந்து சென்ற 13 வயது சிறுவன், அந்த சிறுமியை பாலியல் பலாத்காரம்  செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து சங்வி காவல் நிலைய போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கலு கவாரி கூறுகையில், ‘இயற்கை உபாதை கழிப்பதற்காக பொதுக் கழிப்பறைக்கு சென்ற 12 வயது சிறுமியை பின்தொடர்ந்த 13 வயது சிறுவன் பின்தொடர்ந்தான். சிறுமியின் உறவினர் மகனான இவன், கழிப்பிடத்திற்குள் அத்துமீறி நுழைந்து சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளான். பின்னர் அங்கிருந்து தப்பிவிட்டான். பின்னர் மற்றொரு நாள் சிறுமி வீட்டில் தனியாக இருந்தபோது, ​​​​குற்றம் சாட்டப்பட்ட  சிறுவன் சிறுமியின் வீட்டிற்குள் நுழைந்து மீண்டும் பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளான்.

பாலியல் இச்சைக்கு சம்மதிக்கவில்லை என்றால் கொன்றுவிடுவேன் என்று கத்திரிக்கோலை காட்டி மிரட்டியுள்ளான். பின்னர் சிறுமியின் பெற்றோரை கொன்று  விடுவதாக அச்சுறுத்தி உள்ளான். தொடர்ந்து சிறுமியை பாலியல் பலாத்காரம்  செய்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டான். பாதிக்ககப்பட்ட சிறுமி தனது பெற்றோரிடம் தனக்கு நேர்ந்த சம்பவத்தை தெரிவித்தார். அதையடுத்து மைனரான அந்த சிறுவன் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் (ஐபிசி) 376  (கற்பழிப்பு), 506 (2), சிறார் நீதிச் சட்டம் 453, போக்சோ உள்ளிட்ட பல  பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. தலைமறைவாக இருந்த குற்றவாளியான அந்த சிறுவனை கைது செய்து விசாரித்து வருகிறோம்’ என்றார்.

Tags : Public toilet, 12-year-old girl, raped, arrested
× RELATED பெண்களை ஆபாசமாக பேசிய தகராறில் 12 பேரை...