×

ஒரு வருடமாக போலீசுக்கு டிமிக்கி : பிரபல ரவுடி சுற்றி வளைத்து கைது

அண்ணாநகர்: சென்னை அரும்பாக்கம் ராணி அண்ணாநகர் பகுதியை சேர்ந்தவர் பிரபல ரவுடி சுதாகர் (எ) திக்கு வாய் சுதாகர் (33). இவர், கடந்தாண்டு, கொலை முயற்சி வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் ஜாமினில் வெளியே வந்தார். அதற்கு பிறகு, கடந்த 3.3.21 முதல் வழக்கு சம்பந்தமாக நீதிமன்றத்தில் ஆஜராகாமல் போலீசாருக்கு டிமிக்கி கொடுத்து தலைமறைவாக இருந்தார். அவரை கைது செய்யும்படி அரும்பாக்கம் போலீசாருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதையடுத்து, அண்ணாநகர் உதவி ஆணையர் ரவிச்சந்திரன் தலைமையிலான தனிப்படை போலீசார், ரவுடி சுதாகரை வலைவீசி தேடினர். மதுரவாயல் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் பதுங்கியிருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து நேற்று அந்த வீட்டுக்கு சென்றபோது, போலீசாரை பார்த்ததும் ரவுடி தப்ப முயன்றார். அவரை விரட்டி பிடித்து கைது செய்தனர். பின்னர் அரும்பாக்கம் காவல் நிலையத்துக்கு கொண்டு வந்து விசாரித்தனர்.

இவர் மீது ஏற்கனவே அரும்பாக்கம் காவல் நிலையத்தில் 2 கொலை முயற்சி வழக்குகள், மதுரவாயல் காவல் நிலையத்தில் 2 கொலை வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரிந்தது. மேலும் இவர் பிரபல ரவுடி ராதாகிருஷ்ணனின் கூட்டாளி என்பதும் தெரிந்தது. கைதான ரவுடி சுதாகரை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

Tags : Timikki , For a year, to the police, Timikki, arrested
× RELATED ஓசியில் செய்வதால் பக்தர்கள் டிமிக்கி...