கடலூர் : தொலைதூர படிப்பு விவகாரத்தில் பல்கலைக் கழக மானியக் குழுவிடம் பேச்சுவார்த்தை நடத்தி விரைவில் சுமூக தீர்வு எட்டப்படும் என்று சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளார். கடலூர் மாவட்டம் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் அனுமதியின்றி தொலைநிலை படிப்புகள் நடத்தப்படுவதால் மாணவர்கள் சேர வேண்டாம் என்றும் 2015-2021ம் ஆண்டு வரை நடத்தப்பட்ட படிப்புகள் அங்கீகரிக்கப்படவில்லை என்றும் யுஜிசி அறிவித்திருந்தது.