இருளர் இனத்தை சேர்ந்த 30 குடும்பங்களுக்கு இலவச வீட்டுமனை
05:51 pm Apr 13, 2022 |
செங்கல் சூளைக்கு தேவையான அனைத்தும் மாவட்ட நிர்வாகம் சார்பில் வழங்கப்பட்டு இருக்கிறது அதன் மூலம் செங்கல்சூளை அமைத்து வாழ்வாதாரத்தை பெருகி கொள்ள நடவடிக்கை எடுக்கபட்டுள்ளது. செங்கற்களை விற்று கிடைக்கும் வருமானம் மூலம் மூலப்பொருட்களை வாங்கி பயன்படுத்தி கொள்ளவும் அவர்களை மாவட்டம் நிர்வாகம் அறிவித்துள்ளது தனியார் தொண்டு நிறுவன ஒத்துழைப்புடன் இதற்கான பணிகள் நடைபெறுவதாக திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார். மேலும் திருத்தணி அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள கருவேல மரங்களை அகற்றுவதற்கு 50ஆயிரம் மதிப்பீட்டில் கத்தி போன்ற வெட்டு இயந்திரங்களை வாங்கவும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.