×

அரசியல் பாக்சிங்குகளை பார்த்த பகுதிக்கு பாக்சிங் அரங்கம் இந்த ஆண்டே அமைத்து தரப்படும்; அமைச்சர் மெய்யநாதன் அறிவிப்பு

சென்னை: சட்டமன்றத்தில் கேள்வி நேரத்தின் போது பேசிய ஆயிரம் விளக்கு எழிலன்(திமுக) பேசுகையில், கோபாலபுரம் அரசியல் பாக்சிங்குகளை பார்த்த பகுதி. அங்கு பாக்ஸிங் அரங்கம் அமைத்து தரப்படுமா? என்று கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதில் அளித்து அமைச்சர் மெய்யநாதன் பேசுகையில், உலக வரலாற்றில் உற்றுநோக்கப்பட்ட இடம் கோபாலபுரம். தமிழக விளையாட்டு துறையை உருவாக்கி தந்தவர் கலைஞர். கோபாலபுரம் விளையாட்டரங்கில் பாக்ஸிங் அகாடமி இந்த ஆண்டே தொடங்கப்படும். மேலும் பாளையங்கோட்டையில் விளையாட்டு கிராமத்திற்கான பணிகள் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு பணிகள் நடைபெறும்.

Tags : Minister ,Meyyanathan , A boxing stadium will be set up this year for the area where political boxing was seen; Announcement by Minister Meyyanathan
× RELATED பாஜவுக்கு முகவர்கள் இருந்தால்தானே...