கோவை: கோவையில் தனியார் பேருந்தில் அதிக சத்தத்துடன் ஹாரன் ஒலி எழுப்பியதை தட்டி கேட்ட பொதுமக்கள் மீது ஓட்டுநர் மற்றும் நடந்துனர் சரமாரியாக தாக்கியதாக கூறப்படும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கோவை காந்திபுரம் டவுன்புரம் பேருந்து நிலையத்தில் இருந்து சுற்றி உள்ள பகுதிகளுக்கு ஏராளமான தனியார் பேருந்துகள் சென்று வருகின்றன. அந்த பேருந்துகள் ஏர் ஹாரன்-யை பயன்படுத்தி அதிக ஒலி எழுப்பியதாக அவ்வப்போது புகார் எழுந்துள்ளது.
சில தினங்களுக்கு முன்னர் தனியார் பேருந்து ஒன்று அதிக சத்தத்துடன் ஹாரன் ஒலி எழுப்பித்தாக கூறப்படுகிறது. இது குறித்து பேருந்து நிலையத்தில் நின்று கொண்டி இருந்த பயணி ஒருவர் கேள்வி எழுப்பியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த தனியார் பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனர் அந்த பயணியை சரமாரியாக தாக்கியுள்ளார். தாக்குதல் காட்சியை மற்ற பயணிகள் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து உள்ளனர். தாக்குதல் தொடர்பாக பயணி புகார் எதுவும் கொடுக்காத நிலையில் வீடியோ ஆதாரங்களை கொண்டு போலீசார் விசாரித்து வருகின்றனர். கோவை மாவட்டத்தில் அதிக ஒலி எழுப்பும் ஹாரன்கள் உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து வரும் பல வாகனங்களில் சர்வ சாதாரணமாக பயன்படுத்துவதாக புகார் எழுந்து உள்ளது. விதிமுறை மீறியும் தடை செய்த இடங்களில் ஏர் ஹாரன் உபயோகிக்கும் வாகனங்கள் மீது போக்குவரத்துத்துறை மற்றும் போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்துகிறார்கள்.