சென்னை: நுழைவுத் தேர்வை ரத்து செய்வது தொடர்பாக தீர்மானம் கொண்டுவந்தது யார் என்பது குறித்து பேரவையில் அதிமுக, திமுக காரசார விவாதம் நடத்தி வருகிறது. நுழைவுத் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து பேரவையில் முதன்முதலில் தீர்மானம் கொண்டுவந்தவர் புரட்சித் தலைவி ஜெயலலிதா என முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்துள்ளார். நுழைவுத் தேர்வை கைவிட வேண்டும் என்பதே அதிமுகவின் நிலைப்பாடு எனவும் அவர் கூறியுள்ளார்.