×

தூத்துக்குடியில் 4 அனல்மின்நிலைய அலகு இயங்கியது

தூத்துக்குடி: தூத்துக்குடி துறைமுகத்திற்கு 4 ஆயிரம் டன் நிலக்கரி வந்ததையடுத்து அனல்மின் நிலையத்தில் 4 யூனிட்களும் இயங்கி வருகின்றன. தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் தலா 210 மெகாவாட் வீதம் 5 யூனிட்கள் உள்ளன. இதன் மூலம் தினமும் 1050 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு 2 மற்றும் 3வது யூனிட்களில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது. நிலக்கரி தட்டுப்பாடு அதிகரித்த காரணத்தால் நேற்று முன்தினம் காலை முதல் 4 மற்றும் 5வது யூனிட்களிலும் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது. 1வது யூனிட் மட்டுமே இயங்கியது. இதனால் 840 மெகாவாட் மின்சார உற்பத்தி பாதித்தது. நேற்று முன்தினம் 4 ஆயிரம் டன் நிலக்கரி தூத்துக்குடி துறைமுகத்திற்கு கப்பலில் வந்தது. இந்த நிலக்கரி கன்வேயர் பெல்ட் மூலம் அனல்மின் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, நேற்று காலை முதல் 5வது யூனிட் தவிர மற்ற 4 யூனிட்களும் இயங்கத் தொடங்கின.


Tags : Thoothukudi , There are 4 thermal power plants operating in Thoothukudi
× RELATED தூத்துக்குடி பொட்டலூரணி கிராமத்தில்...