சென்னை: ஆளுநர் மாளிகையில் பணியாற்றி வந்த ஐபிஎஸ் அதிகாரிகளை எஸ்பியாக பதவி உயர்வும், 3 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம் செய்து உள்துறை செயலாளர் பிரபாகர் உத்தரவிட்டுள்ளார். தமிழக உள்துறை செயலாளர் பிரபாகர் பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது: சென்னை ஆளுநர் மாளிகை பாதுகாப்பு உதவி எஸ்பியாக பணியாற்றி வந்த விஸ்வேஷ் பால சுப்ரமணியம் சாஸ்திரி எஸ்பியாக பதவி உயர்வு வழங்கப்பட்டு அதே பதவியில் அமர்த்தப்பட்டுள்ளார். அதேபோல், உயர் நீதிமன்ற வழக்குகள் கண்காணிப்பு பிரிவு உதவி ஐஜியாக இருந்த ராமகிருஷ்ணன் சென்னை, காவலர் நலன் உதவி ஐஜியாகவும், காத்திருப்போர் பட்டியலில் இருந்த எஸ்பி மகேஷ்
குமார், சென்னை உயர் நீதிமன்ற வழக்குகள் கண்காணிப்பு பிரிவு உதவி ஐஜியாகவும், அயல் பணியில் இருந்து திரும்பிய அபிஷேக் தீட்சித் சென்னை ரயில்வே டிஐஜியாகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.