×

காவேரிப்பாக்கம் அருகே காதலிக்க மறுத்த கல்லூரி மாணவிக்கு கழுத்தில் கத்தி வெட்டு: அம்பத்தூர் கோர்ட்டில் வாலிபர் சரண்

காவேரிப்பாக்கம்:  ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் அடுத்த உத்திரம்பட்டு கிராமத்தை சேர்ந்த 21 வயது இளம்பெண், காவேரிப்பாக்கத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பிபிஏ மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். அவர் கடந்த மாதம் 4ம் தேதி மாலை,  வீட்டின் அருகே நாகத்தம்மன் கோயிலுக்கு சாமி கும்பிட சென்றுள்ளார். அப்போது அதே பகுதியை சேர்ந்த நிதிஷ்குமார்(23), அவரை பின் தொடர்ந்து சென்று காதலிக்க வற்புறுத்தியதாக தெரிகிறது. ஆனால் மாணவி ஏற்க மறுத்துள்ளார்.

இதில் ஆவேசம் அடைந்த நிதிஷ்குமார் சிறிய கத்தியால் அவரது கழுத்து, கை, மற்றும் முதுகு உள்ளிட்ட பகுதிகளில் சரமாரியாக வெட்டி விட்டு தப்பினார். இதில் படுகாயமடைந்த மாணவி, ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தார். இதைப்பார்த்த அப்பகுதி பொதுமக்கள், அவரை மீட்டு வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  பின்னர் அமேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். புகாரின்படி காவேரிப்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, நிதிஷ்குமாரை தேடி வந்தனர். இந்நிலையில், நேற்று நிதிஷ்குமார் அம்பத்தூர் நீதிமன்றத்தில் சரண் அடைந்தார்.


Tags : Kaveripakkam ,Valipar Charan , College student stabbed in neck for refusing to fall in love near Kaveripakkam: Valipar Charan in Ambattur court
× RELATED காவேரிப்பாக்கம் அருகே கோடை வெயில்...