×

கோம்பை அருகே 50 அடி உயர மரத்தில் தவித்த தொழிலாளி பத்திரமாக மீட்பு

தேவாரம்: கோம்பை அருகே கருக்கோடையில் 50 அடி இலவ மரத்தில் ஏறி இறங்க முடியாமல் தவித்த தொழிலாளியை தீயணைப்பு துறையினர் மீட்டனர். கோம்பை அருகே கருக்கோடையில் க.புதுப்பட்டியை சேர்ந்த ராஜேந்திரன் என்ற கூலி தொழிலாளி 50 அடி உயரம் கொண்ட இலவ மரத்தில் ஏறி பஞ்சு கூடுகள் எடுத்துக் கொண்டு இருந்தார். அப்போது ராஜேந்திரனுக்கு திடீரென கை உடைந்தது. இதனால் மரத்தில் இருந்து கீழே இறங்க முடியாமல் தவித்தார். இதுகுறித்து, பொதுமக்கள் உத்தமபாளையம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். உடனே தீயணைப்பு துறை நிலைய அலுவலர் ராஜலட்சுமி தலைமையில், விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் உயிருக்கு போராடிகொண்டிருந்த, ராஜேந்திரனை உயரமான ஏணி மூலம் மீட்டு, 108 ஆம்புலன்சில் உத்தமபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். உயிரோடு தொழிலாளியை மீட்டதால் பொதுமக்கள் கை தட்டி தீயணைப்பு துறையினரை பாராட்டினர்.

Tags : Gombe , Worker rescued from 50-foot tree near Gombe
× RELATED கோம்பை பேரூராட்சியில் ரூ.84 லட்சம்...