×

பெண் பலாத்கார வழக்கில் கைதான 4 பேரை 7 நாள் காவலில் விசாரிக்க அனுமதி கோரி சிபிசிஐடி மனு: திருவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் இன்று விசாரணை

திருவில்லிபுத்தூர்: விருதுநகர் பெண் பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான 4 பேரை, காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி, சிபிசிஐடி சார்பில் திருவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் மனு செய்யப்பட்டுள்ளது. இந்த மனு இன்று விசாரணைக்கு வருகிறது.
விருதுநகரை சேர்ந்த 22 வயது இளம்பெண்ணை காதலித்து பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், ஹரிஹரன், மாடசாமி, பிரவீன், ஜூனத் அகமது மற்றும் 4 பள்ளி மாணவர்கள் ஆகிய 8 பேரை போலீசார் கைது செய்தனர்.

இந்த வழக்கை தற்போது சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர். முதல் கட்டமாக பாதிக்கப்பட்ட பெண், தாயிடம் விசாரணை நடத்தினர். அவர்களின் வீடுகளில் சோதனை நடத்தி லேப்டாப், மொபைல்களில் ஆய்வு செய்தனர்.  பாதிக்கப்பட்ட பெண், தாய், அக்காள், அண்ணன், பக்கத்து வீட்டுக்காரர்களிடம் விசாரித்து அவர்கள் அளித்த தகவல்கள் வீடியோவில் பதிவு செய்யப்பட்டன.இந்த வழக்கில் கைதாகி மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஹரிஹரன், மாடசாமி, பிரவீன், ஜூனத் அகமது ஆகிய  4 பேரையும், 7 நாள் காவலில் விசாரிக்க அனுமதி கேட்டு நேற்று திருவில்லிபுத்தூரில் உள்ள வன்கொடுமை தடுப்பு நீதிமன்றத்தில் சிபிசிஐடி தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீது  இன்று விசாரணை நடக்கிறது.



Tags : CBCID ,Srivilliputhur , 4 arrested in female rape case 7 days in custody for questioning CBCID petition seeking permission: Hearing in Srivilliputhur court today
× RELATED ஆருத்ரா மோசடி வழக்கில் கைது...