×

ரூ.22,900 வரை அதிகரிப்பு சபரிமலையில் பூஜை கட்டணங்கள் உயர்வு: ஏப்.10 முதல் அமல்

திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோயிலில் அனைத்து பூஜை கட்டணங்கள், அப்பம், அரவணை உள்பட பிரசாதங்களின் விலையை உயர்த்த தீர்மானிக்கப்பட்டு  உள்ளது. அதன்படி, படி பூஜை 22,900 ரூபாயும், களபாபிஷேகம் 15,900 ரூபாயும், சகஸ்ரகலசம் 11,250 ரூபாயும் உயர்த்தப்பட்டு உள்ளது. புதிய கட்டண விவரங்கள் வருமாறு: படிபூஜை ரூ. 1,37,900 (பழைய கட்டணம் 1,15,000), சகஸ்ரகலசம் ரூ. 91,250 (80,000), உதயாஸ்தமன பூஜை ரூ. 61,800 (50,000), உற்சவபலி ரூ. 37,500 (30,000), களபாபிஷேகம் ரூ. 38,400 (22,500), தங்க அங்கி சார்த்துதல் ரூ. 15,000 (10,000), புஷ்பாபிஷேகம் ரூ. 12,500 (10,000), சதகலசம் ரூ. 12,500 (10,000), அஷ்டாபிஷேகம் ரூ. 6,000 (5,000), உச்சபூஜை ரூ. 3,000 (2,500), பகவதி சேவை ரூ. 2,500 (2,000), உஷபூஜை ரூ.1,500 (1000), கணபதி ஹோமம் ரூ.375 (300), கெட்டு நிறைத்தல் ரூ. 300 (250), அபிஷேக நெய் (100 மி.லி) ரூ. 100 (75) நீராஞ்சனம் ரூ.  125 (100), அரவணை ரூ. 100 (80), அப்பம் 1 பாக்கெட் ரூ. 45 (35). இந்த கட்டண உயர்வு சித்திரை விஷு பூஜைகளுக்காக நடை திறக்கப்படும் ஏப்ரல் 10 முதல் அமலுக்கு வரும் என்று திருவிதாங்கூர் தேவசம் போர்டு அறிவித்து  உள்ளது.

Tags : Sabarimala , Increase to Rs. 22,900 Pooja fees increase in Sabarimala: Effective from 10th April
× RELATED சித்திரை விஷு சபரிமலை கோயில் நடை நாளை திறப்பு