×

வருசநாடு அருகே மலைக்கிராமத்துக்கு தார்ச்சாலை அமைக்க கோரிக்கை

வருசநாடு: தேனி மாவட்டம், கடமலை மயிலை ஒன்றியம் தண்டியகுளம், அண்ணாநகர், கோடாலியூத்து,  இந்திராநகர், பொம்முராஜபுரம், வெள்ளிமலை, அரசரடி, காந்திகிராமம் உள்ளிட்ட மலைக்கிராமங்களில் கடந்த 50 ஆண்டுகாலமாக அடிப்படை வசதியின்றி பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர். குறிப்பாக இப்பகுதியில் தார்ச்சாலை அமைக்கப்படாததால், கரடுமுரடான மண் சாலைகளில் மலைக்கிராம மக்கள் ஆபத்தான  பயணம் மேற்கொண்டு வருகின்றனர். தார்ச்சாலை வசதியில்லாததால், வாகன போக்குவரத்து வசதியில்லை. இதனால் ரேஷன் அரிசி, சர்க்கரை, கேஸ் சிலிண்டர் உள்ளிட்ட அனைத்து அத்தியாவசிய பொருட்களையும் தலைச்சுமையாக
மக்கள் சுமந்து செல்கின்றனர்.

தார்ச்சாலை வசதி, தெருவிளக்கு வசதி, பள்ளி வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தரும்படி மலைக்கிராம மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதனையேற்று ஒரு சில கிராமங்களில் மட்டும் அடிப்படை வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன. இதனால் பிற கிராமங்களில் வசிக்கும் மலைக்கிராம மக்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். மலைக்கிராம மக்கள் நலன் கருதி, அனைத்து மலைக்கிராமங்களுக்கும் தார்ச்சாலை வசதி ஏற்படுத்தி தர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.


Tags : Tarsala , Varusanadu, to the hill village, Darshala, request
× RELATED ₹72 லட்சம் மதிப்பில் புதிய தார்சாலை பணி