×

விருதுநகர் இளம்பெண் பலாத்காரம் மேலும் பல பெண்களுக்கு டார்ச்சரா? கைதானவர்களிடம் தீவிர விசாரணை-மதுரை சரக டிஐஜி பொன்னி தகவல்

விருதுநகர் : இளம்பெண் பலாத்கார சம்பவத்தில் கைதானவர்கள் மேலும் பல பெண்களிடம் பாலியல் தொல்லையில் ஈடுபட்டனரா என விசாரணை நடந்து வருவதாக மதுரை சரக டிஐஜி பொன்னி தெரிவித்துள்ளார்.விருதுநகரில் 22 வயது இளம்பெண்ணை, மேலத்தெருவை சேர்ந்தவர் ஹரிஹரன் (27) திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி பழகி வந்தார். அப்பெண்ணுடன் உல்லாசமாக இருந்ததை வீடியோ எடுத்து நண்பர்கள் மாடசாமி, ஜூனத் உட்பட பலருக்கு அனுப்பினார். அவர்களும் அப்பெண்ணை மிரட்டி பலாத்காரம் செய்துள்ளனர். சம்பவம் தொடர்பாக பெண் அளித்த புகாரின்பேரில், விருதுநகர் ரூரல் போலீசார் விசாரணை செய்தனர். இதில் ஹரிஹரன், மாடசாமி, பிரவீன், ஜூனத் அகமது மற்றும் 4 மாணவர்களை போலீசார் கைது செய்தனர்.

சம்பவம் தொடர்பான விசாரணைக்காக விருதுநகர் எஸ்பி அலுவலகத்திற்கு வந்த மதுரை சரக டிஜஜி பொன்னி செய்தியாளர்களிடம் பேசியதாவது:விருதுநகரில் 22 வயது இளம் பெண்ணை திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி ஹரிஹரன் என்ற இளைஞர் பாலியல் தொடர்பு கொண்டு, அதை வீடியோ எடுத்துள்ளார். மேலும், வீடியோவை காட்டி மிரட்டி பாலியல் தொந்தரவு செய்துள்ளார். அத்துடன் தனது நண்பர்களிடம் காட்டி, அவர்களும் இளம் பெண்ணிற்கு பாலியல் தொந்தரவு செய்துள்ளனர். ரூரல் போலீசில் இளம்பெண்ணின் புகாரை தொடர்ந்து ஹரிஹரன், மாடசாமி, பிரவீன், ஜூனத் அகமது என்ற 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 4 சிறுவர்கள் கூர்நோக்கு இல்லத்தில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

தற்போது இளம்பெண் சமூக நலத்துறை ஒருங்கிணைந்த சேவை மையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளார். இளம்பெண்ணின் புகார் தொடர்பாக தீவிர விசாரணை நடத்தி வருகிறோம்.
பாலியல் தொந்தரவில் இருக்கும் பெண்கள் காவல் நிலையங்களில் புகாரளிக்கலாம். பாதிக்கப்பட்டுள்ள பெண்கள் 181 என்ற இலவச தொலைபேசி எண்ணில் தெரிவிக்கலாம். பள்ளி குழந்தைகளை நல்வழிப்படுத்தி, அவர்களின் கவனம் கல்வியில் இருக்க பள்ளிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.

பெண் குழந்தைகள் கவனத்துடன் இருக்க வேண்டும். பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான கொடுமைகள் தீவிர விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது. கைதான குற்றவாளிகள் இதுபோன்று பிறருக்கு பாலியல் தொந்தரவு செய்துள்ளார்களா என விசாரணை நடந்து வருகிறது. பள்ளி, கல்லூரிகளில் பயிலும் பெண் குழந்தைகள் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார். எஸ்பி மனோகர், டிஎஸ்பி அர்ச்சனா உடனிருந்தனர்.

Tags : Virudhunagar ,Madurai Commodity ,DIG ,Ponni , Virudhunagar: An investigation is underway as to whether those arrested in the teen rape case also sexually harassed several other women.
× RELATED சட்ட விரோதமாக பட்டாசு தயாரித்ததே...