சென்னை: நகர்ப்புற பகுதிகளை பசுமையாக்கி, மக்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்துவதற்கு 500 பூங்காக்கள் உருவாக்கப்படும் என நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்திருக்கிறார். கடந்த 10 ஆண்டுகளாக பராமரிப்பு இன்றி புறக்கணிக்கப்பட்ட 149 பெரியார் நினைவு சமத்துவபுரங்கள் ரூ.190 கோடி செலவில் சீரமைக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.