கடலூர்: விவசாயிகள் ஒன்றிணைந்து, தாங்கள் உற்பத்தி செய்யும் பொருட்களை மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களாக உருவாக்கும் முறை கடலூர் மாவட்டத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறை சார்பில், நீர்ப்பாசன வேளாண்மை நவீன மயமாக்கல் திட்டம், 3-வது பிரிவின் படி விவசாயிகள் ஒன்றிணைந்து தாங்கள் உற்பத்தி செய்யப்படும் பொருட்களை மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களாக உருவாக்கும் முறை கொண்டு வரப்பட்டுள்ளது. விவசாயி உற்பத்தி செய்யும் பொருட்களை, எப்படி சந்தைப் படுத்துவது என்பது குறித்த ஆலோசனைக் கூட்டம் கடலூரில் நடைபெற்றது.