புதுக்கோட்டை: முதலமைச்சரின் முயற்சியால்தான் செஸ் ஒலிம்பியாட் போட்டி தமிழகத்தில் நடத்தப்பட உள்ளது என்று விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்திருக்கிறார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் செஸ் ஒலிம்பியாட் 2022 போட்டியை நடத்த தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது. கிழக்கு கடற்கரை சாலையிலுள்ள பல்வேறு நட்சத்திர விடுதிகளில் செஸ் ஒலிம்பியாட் போட்டியை நடத்த திட்டமிடப்பட்டிருகிறது. 2021ல் பதக்கம் வென்ற தமிழக வீரர்களுக்கு ரூ.1.98 கோடி பரிசுத்தொகையை முதல்வர் வழங்கினார். விளையாட்டுத்துறை மற்றும் வீரர்களின் மேம்பாட்டிற்கு தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என்று கூறினார்.