×

திருப்பூர் குமரன் சாலையில் உள்ள ஸ்ரீ மகா கணபதி ஜுவல்லரியில் 3 பேர் கொண்ட லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை

திருப்பூர்: திருப்பூர் குமரன் சாலையில் உள்ள ஸ்ரீ மகா கணபதி ஜுவல்லரியில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை. முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணியின் சகோதரர் அன்பரசனின் உறவினர் கடை என்பது குறிப்பிடத்தக்கது. தமிழக முன்னாள் அமைச்சரும், அதிமுக முக்கிய தலைவர்களில் ஒருவருமான  எஸ்.பி வேலுமணி வீட்டில் ஏழு மாத இடைவெளியில் மீண்டும் லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் இன்று சோதனை நடத்தி வருகின்றனர். மேலும் தமிழ்நாடு முழுவதும் கோவை, திருப்பூர், சேலம்  உள்ளிட்ட 58 இடங்களில் முன்னாள் அமைச்சர் வேலுமணிக்கு சொந்தமான இடங்கள் அலுவலகங்கள் மற்றும் அவரது உறவினர்களுக்கு சொந்தமான இடங்கள், கடைகள் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

கடந்த 7 மாதங்களுக்கு முன்பாக முன்னாள் அமைச்சர் வீட்டில் ரெய்டு நடந்த நிலையில் மீண்டும் அவருக்கு சொந்தமான இடங்கள் மற்றும் அவரது உறவினர்களுக்கு சொந்தமான இடங்களில் ரெய்டு  நடப்பது அதிமுக  வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  இந்த நிலையில் முன்னாள் அமைச்சர் வேலுமணியின் சகோதரர் அன்பரசனின் உறவினருக்கு சொந்தமான ஸ்ரீ மகா கணபதி ஜுவல்லரி திருப்பூர் குமரன் சாலையில் செயல்பட்டு வருகிறது. இன்று காலை 7 மணி முதல் லஞ்ச ஒழிப்பு துறையினர் அந்த கடையில்  சோதனை மேற்கொண்டு வருகின்றனர். அதிகாலை கடைக்கு வந்த 3 பேர் கொண்ட லஞ்ச ஒழிப்புத்துறை குழுவினர் கடைக்குள் சென்று கணக்கு விபரங்களை சோதனை செய்து வருகின்றனர். மேலும் கடை ஊழியர்களிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Sri Maha Ganabathi Juellery ,Tiruppur Kumaran Road , Tiruppur, Sri Maha Ganapati Jewelery, anti-corruption, check
× RELATED புதுகை அருகே பரபரப்பு; மாட்டு சாணம்...