×

மக்கள் நீதி மய்யம் துணை செயலாளர் விலகல்

சென்னை: மக்கள் நீதி மய்யத்தின் செய்தி மற்றும் ஊடகப் பிரிவு மாநில துணைச் செயலாளரும் காஞ்சிபுரம் மண்டல பொறுப்பாளருமான ம.தொல்காப்பியன் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் கட்சி தலைவர் கமல்ஹாசனுக்கு அனுப்பி உள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:
உங்களை அரசியலுக்கு அழைத்தவன்   நான் என்கிற வகையில், எனக்கு நேர்ந்த கசப்பான அனுபவங்களால் இந்த பதவியில் இருந்தும்  மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்தும் விலகிக் கொள்ள முடிவு செய்து இருக்கிறேன். சுரேஷ் அய்யருக்கு கொடுத்த முக்கியத்துவம், பார்ட் டைம் அரசியல் என குழப்பமான பேச்சுகள், தலைமைப் பண்பு இல்லாமை, போன்ற சில காரணங்களுக்காகவும், சொல்லப்படாத வேறுபல காரணங்களுக்காகவும் நான் கட்சியில் இருந்து என்னை விடுவித்துக் கொள்கிறேன் என்று எழுதியிருக்கிறார்.

Tags : People's Justice Center ,Deputy Secretary , People's Justice Center, Deputy Secretary,
× RELATED இந்தியாவிற்கு இந்த தேர்தல் மிகவும்...