×

செங்கல்பட்டு அருகே பாலாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள உயர்மட்ட பாலத்தில் நடைபெறும் பராமரிப்பு பணிகள் தொடர்பாக அமைச்சர் எ.வ.வேலு நேரில் ஆய்வு


சென்னை : தமிழக பொதுப்பணிகள், நெடுஞ்சாலைசள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு சென்னை தேசிய நெடுஞ்சாலையில் (NH45) செங்கல்பட்டு அருகே பாலாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள உயர்மட்ட பாலத்தில் நடைபெறும் பராமரிப்பு பணிகள் தொடர்பாக நேரில் ஆய்வு செய்தார். இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,

சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு போக்குவரத்துக்கு பெரிதும் பயன்படுத்தப்படும் சென்னை -  திருச்சி  தேசிய நெடுஞ்சாலையில் (எண்.45) செங்கல்பட்டு அருகே பாலாற்றின்‌மீது கட்டப்பட்டுள்ள உயர்மட்ட பாலங்களில்‌ நடைபெற்று வரும் பாலத்தின்‌விரிவடையும்‌தன்மை கொண்ட இணைப்பு மாற்றும்‌பணி (Replacement of Expansion Joint) தொடர்பான ஆய்வு செய்யப்பட்டது.பாலாற்றின்‌மீது இரண்டு உயர்மட்ட பாலங்கள் கட்டப்பட்டுள்ளன. இதில்‌, திண்டிவனம்‌ நோக்கி செல்லும்‌சாலையில்‌உள்ள உயர்மட்ட பாலம்‌ 1954-ஆம்‌ஆண்டிலும்‌, சென்னை நோக்கி செல்லும்‌சாலையில் உள்ள உயர்மட்ட பாலம்‌1994-ஆம்‌ஆண்டிலும்‌ கட்டப்பட்டன. இப்பாலங்கள்‌ஒவ்வொன்றும்‌23 கண்கள்‌(23 Spans) கொண்ட பாலங்களாகும்‌.  

இப்பாலங்களில் உள்ள விரிவடையும்‌தன்மை கொண்ட இணைப்புகள் (Expansion joints) பழுதடைந்துவிட்டன. இதனை சரிசெய்யும்‌ பணியினை ரூ.83.79 இலட்சங்கள்‌மதிப்பில்‌இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம்‌ஒப்பந்தம் கோரி திருவாளர்கள்‌HPR கன்ஸ்ட்ரக்சன்ஸ்‌, சென்னை என்ற நிறுவனத்துடன்‌16.11.2020ல் உடன்படிக்கை செய்துள்ளது. இப்பணியினை நிறைவு செய்வதற்கான காலம்‌6 மாதம்‌ஆகும்‌.

இப்பணிகள் நடைபெறும்போது வாகனப் போக்குவரத்து முழுவதுமாக பாலத்தின் மீது செல்லாமல் நிறுத்தப்பட வேண்டும்.  இதற்கான அனுமதியினை மாவட்ட ஆட்சியர்‌, செங்கல்பட்டு அவர்கள்‌25.01.2021 அன்று வழங்கி உள்ளார்கள். இதன்‌தொடர்ச்சியாக, இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தால்‌மாவட்ட காவல்‌ கண்காணிப்பாளரிடம்‌இப்பணியினை மேற்கொள்வதற்கு உரிய ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்‌கொள்ளப்பட்டது.  

சட்டமன்ற தேர்தல்‌மற்றும்‌கோவிட்‌ பெருந்தொற்று பரவலின்‌காரணமாக 2021ஆம் ஆண்டில் இப்பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டு இருந்தது.பின்னர்‌, காவல்‌துறை அலுவலர்களுடன்‌போக்குவரத்து தடை செய்வது தொடர்பாக பலமுறை கூட்டாய்வு நடத்தப்பட்டது. தொடர்‌மழையின்‌காரணமாகவும்‌தீபாவளி மற்றும்‌ பொங்கல்‌பண்டிகைகள் கொண்டாட மக்கள்‌சொந்த ஊருக்கு செல்வார்கள் என்பதால்‌பணிகளை உடனடியாக துவங்க இயலவில்லை.  

இதனிடையில்‌, போக்குவரத்தினை ஒழுங்குபடுத்த காவல்‌ துறையினருக்கு உதவியாக இருப்பதற்காக நாள்‌ஒன்றுக்கு 105 நபர்களை வழங்குமாறு 10.11.2021 அன்று மாவட்ட ஆட்சியர்‌, செங்கல்பட்டு அவர்களால்‌இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திற்கு கடிதம் எழுதப்பட்டது. இப்பாலத்தின்‌வழியே பயணிக்கும்‌ வாகனங்களின்‌எண்ணிக்கை அதிகமாக உள்ளதால்‌curing period 28 நாட்களிலிருந்து 7  நாட்களாக குறைப்பதற்காக Micro Concrete முறையினை பயன்படுத்த NHAI ஆல் முடிவு எடுக்கப்பட்டது. மேலும்,  105 நபர்களை காவல்‌துறைக்கு வழங்குவதற்காகவும்‌, அதிகப்படியாக ஏற்படும்‌கூடுதல்‌ செலவினமான ரூ. 56.30 இலட்சத்திற்கு திருத்திய மதிப்பீடு தயாரித்து 17.01.2022 அன்று அதற்கான ஒப்புதலை NHAI வழங்கியது. பொங்கல்‌தொடர்‌விடுமுறை முடிந்தவுடன்‌, பணிகளை துவக்க உத்தேசிக்கப்பட்டது.

தற்பொழுது திண்டிவனம் நோக்கி செல்லும் பாலம் சீரமைப்புப்‌பணி 07.02.2022 துவங்கப்பட்டு   24.02.2022 அன்று முடிவடைந்து, போக்குவரத்து அனுமதிக்கப்படுகிறது.  சென்னை நோக்கி செல்லும் புதிய பாலத்தில்‌சீரமைப்புப்‌பணி மேற்கொள்ளப்பட வேண்டிய 24 Expansion Joints-களில் 20 முடிக்கப்பட்டுள்ளது.  மீதமுள்ள பணிகளை 16.03.2022-க்குள் நிறைவு செய்து,  போக்குவரத்து அனுமதிக்கும் வகையில் போர்கால அடிப்படையில் பணிகள் நடைபெற்று வருகின்றன.  இந்த ஆய்வின் போது,  மாண்புமிகு பொதுப்பணித் துறை அமைச்சருடன் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் மண்டல அலுவலர் திரு.சோமசேகரன் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் திட்ட இயக்குநர் திரு.ஜனகுமார் ,தலைமைப்பொறியாளர்கள் திரு.பாலமுருகன், (தேசிய நெடுஞ்சாலை), திரு.சந்திரசேகர் (கட்டுமானம் (ம) பராமரிப்பு)  மற்றும் கண்காணிப்பு பொறியாளர், கோட்டப் பொறியாளர் ஆகியோர் உடனிருந்தனர்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags : Palat ,Bringalatu ,Minister ,A. V.V ,Velu , Chengalpattu, Palaru, Maintenance, Works, Minister, E.V.Velu, Research
× RELATED தமிழகத்தின் நீராதார உரிமைகளை...