×

வளசரவாக்கத்தில் நள்ளிரவில் வீடு புகுந்து விபரீதம் கத்தி முனையில் துணை நடிகையை நிர்வாணப்படுத்தி வீடியோ

* ரூ.50 ஆயிரம் பணம், நகை பறிப்பு
* போலீசிடம் சென்றால் பேஸ்புக்கில் வெளியிடுவோம் என மிரட்டல்
* மர்ம நபர்கள் 2 பேருக்கு போலீஸ் வலை

சென்னை: வளசரவாக்கத்தில் வீடு புகுந்து துணை நடிகை ஒருவரை கத்திமுனையில் நிர்வாணப்படுத்தி பல கோணங்களில் வீடியோ எடுத்து, மிரட்டி ரூ.50 ஆயிரம் பணம், 10 கிராம் நகையை கொள்ளையடித்து சென்ற 2 மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். மேலும் இது குறித்து போலீசில் புகார் அளித்தால் வீடியோவை வெளியிடுவோம் என்று மிரட்டிவிட்டு சென்றுள்ளதாக கூறப்படுகிறது. சென்னை வளசரவாக்கம் ஏ.கே.ஆர்.நகர் முதல் தெருவை சேர்ந்தவர் விஜயலட்சுமி(35). சினிமா துறையில் துணை நடிகையாக உள்ளார். இவர் தனது கருத்துவேறுபாடு காரணமாக 3 ஆண்டுகளாக கணவரை பிரிந்து தனியாக வசித்து வருகிறார். இவர் நேற்று அதிகாலை வளசரவாக்கம் காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் ஒன்று அளித்தார்.

அந்த புகார் குறித்து போலீசார் கூறியதாவது: சினிமாவில் துணை நடிகையாக விஜயலட்சுமி உள்ளார். இவரது வீட்டின் கதவை இரவு 11.30 மணிக்கு தட்டும் சத்தம் கேட்டுள்ளது. இதனால் துணை நடிகை விஜயலட்சுமி கதவை திறந்துள்ளார். அப்போது வீட்டின் முன்பு இரண்டு நபர்கள் நின்றுள்ளனர். கதவை திறந்ததும் ஒரு நபர் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து கண்ணிமைக்கும் நேரத்தில் கையில் வைத்திருந்த கத்தியால் துணை நடிகை விஜயலட்சுமியின் கழுத்தில் வைத்து சத்தம் போட்டால் கொலை செய்து விடுவேன் என்று மிரட்டியுள்ளார். இதனால் அவர் அதிர்ச்சியில் மவுனமானார்.

அப்போது மிரட்டியபடி வீட்டிற்குள் புகுந்த இன்னொரு நபர் தனது செல்போனில் வீடியோவை ஆன் செய்தார். மேலும் ஒரு மர்ம நபர் விஜயலட்சுமியை அவரது ஆடைகளை ஒவ்வொன்றாக கழற்றி சொல்லி அதை வீடியோ எடுத்துள்ளார். ஒரு கட்டத்தில் நடிகையை நிர்வாணமாக பல கோணங்களில் வீடியோ எடுத்துள்ளார். அதோடு இல்லாமல் நடிகை கழுத்தில் அணிந்த இருந்த 6 கிராம் செயின், 4 கிராம் கம்மலை கழற்ற சொல்லியுள்ளார். ஆனால் விஜயலட்சுமி நகையை கொடுக்க முடியாது என்று கூறியுள்ளார். அப்போது மர்ம நபர் தற்போது எடுக்கும் வீடியோவை பேஸ்புக் லைவ் செய்துவிடுவேன் என்று மிரட்டி நகைகள் மற்றும் நடிகை வைத்திருந்த ரூ.50 ஆயிரம் பணத்தை பறித்துள்ளார்.

பின்னர் இதுகுறித்து வெளியில் சொன்னால் கொலை செய்துவிடுவேன் என்று மிரட்டிவிட்டு அந்த நபர் தனது நண்பருடன் அங்கிருந்து தப்பி சென்றுள்ளார். வந்த நபர்கள் யார் என்று துணை நடிகை விஜயலட்சுமியால் அடையாளம் கூறமுடியவில்லை. இரவு 11.30 மணிக்கு மேல் சம்பவம் நடந்துள்ளது. ஆனால் துணை நடிகை விஜயலட்சுமி நேற்று அதிகாலை 3 மணிக்கு வாய் மொழியாக புகார் அளித்துள்ளார். அப்போது இரவு ரோந்து பணியில் இருந்து விருகம்பாக்கம் சட்டம் ஒழுங்கு இன்ஸ்பெக்டர் தாம்சன் சேவியர் விஜயலட்சுமியிடம் நடந்த சம்பவத்தை புகாராக கொடுக்கும் படி கூறினார். ஆனால் துணை நடிகை நான் காலையில் வந்து புகார் அளிப்பதாக கூறிவிட்டு சென்றுவிட்டார்.

உயர் காவல் துறை அதிகாரிகள் உத்தரவுப்படி அவசரத்தில் பாதிக்கப்பட்டவர்கள் யாராக இருந்தாலும் வாய் மொழியாக புகார் அளித்தாலும் அந்த புகாரின் மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளனர். இதனால் துணை நடிகை விஜயலட்சுமியின் புகாரின் படி அவர் வசித்து வரும் ஏ.ேக.ஆர்.நகர் முதல் தெருவில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி பதிவுகளை பெற்று விசாரணை நடத்தி வருகிறோம். அதேநேரம் புகார் அளித்த துணை நடிகை மீதும் எங்களுக்கு சந்தேகம் உள்ளது. எனவே அவரிடமும் சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.

Tags : Valasaravakkam , Video of the supporting actress being stripped naked at the point of screaming after breaking into a house at midnight in Valasaravakkam
× RELATED குழந்தை குடித்த பாலில் பல்லி பிரபல...