×

பல்வேறு மாநிலங்களுக்கு சப்ளை போதை பொருட்கள் தொழிற்சாலைக்கு சீல்: ஆந்திராவில் சென்னை போலீஸ் அதிரடி

திருமலை: சென்னையில் போதை மருந்து பயன்படுத்தி வந்த 2 பேரை போலீசார் கடந்த வாரம் கைது செய்துள்ளனர். விசாரணையில், அவர்கள் ஆந்திர மாநிலம், பிரகாசம் மாவட்டம் ஓங்கோலில் உள்ள தொழிற்பூங்காவில் ரசாயன தொழிற்சாலை என வாடகைக்கு எடுத்து போதைப்பொருள் தயாரித்து பல்வேறு மாநிலங்களுக்கு விற்பனை செய்து வருவதாக போலீசாரிடம் வாக்குமூலம் அளித்தனர். இந்நிலையில், சென்னை போலீசார் ஓங்கோல் போலீசாருடன் இணைந்து தொழிற்சாலையை நேற்று ஆய்வு செய்தனர். அப்போது ரசாயன தொழிற்சாலை எனக்கூறி போதை பொருள் தயாரிக்கப்படுவது தெரியவந்தது. போதைக்காக  மெத்தாம்பெட்டமைன் என்ற தடை செய்யப்பட்ட போதைப்பொருள்  பாக்கெட்டுகளாக தயார் செய்து தமிழகத்தில் சென்னை உட்பட பல்வேறு மாநிலங்களுக்கு கடத்தப்பட்டு வந்தது விசாரணையில் தெரிய வந்தது. மேலும் இந்த தொழிற்சாலையை நடத்தி வந்த ஐதராபாத்தை சேர்ந்த  விஜய், வெங்கட் ரெட்டி ஆகிய இருவரை கைது செய்து விசாரணைக்காக சென்னைக்கு அழைத்து சென்றுள்ளனர். முன்னதாக, அந்த தொழிற்சாலைக்கு சீல் வைத்து அங்கிருந்த பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Tags : Seals ,Chennai ,Andhra Pradesh , Supply to various states Seals drug factory: Chennai police action in Andhra Pradesh
× RELATED போலீஸ் ஆதரவுடன் மீஞ்சூர் பகுதி...