மதுரை: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு சிறப்பு காவல் படையினர் பாதுகாப்பு வழங்க ஐகோர்ட் கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழ்நாடு காவல்துறை தலைவரும், தூத்துக்குடி காவல் கண்காணிப்பாளரும் சிறப்பு காவல் படையினரை நியமிக்க வேண்டும். இணை ஆணையர் தக்கார் ஆகியோர் தேவையான பணியாளர்களை நியமித்து சிரமமின்றி சாமி தரிசனம் செய்ய வழிவகை செய்யவும் உத்தரவிட்டுள்ளது.