மதுரை: டியூஷன் எடுப்பது ஆசிரியர் சமூகத்தில் புற்றுநோய் போல் பரவி பணம் சம்பாதிக்கும் பேராசையை அதிகரிக்கிறது என்று ஐகோர்ட் கிளை கூறியுள்ளது. இவை தொடர்ந்தால் ஆசிரியர்களின் பணி மேம்பாடு, பணி பக்தியை எதிர்பார்க்க முடியாது. மேலும் டியூசன் எடுக்கும் அரசு ஆசிரியர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்றக் கிளை உத்தரவிட்டுள்ளது.