நியூயார்க் : உக்ரைன் மீது ரஷ்யா நடத்திவரும் போர் தொடர்பாக விவாதிக்க ஐ.நா பொதுச்சபையின் அவசரக்கூட்டம் இன்று நடைபெற உள்ளது. மொத்தமுள்ள 15 நாடுகளில் 11 நாடுகள் தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவித்ததால் ஐ.நா பொதுச்சபையின் அவசரக்கூட்டம் இன்று கூடுகிறது. இந்தியா, சீனா, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய 3 நாடுகள் வழக்கம்போல் வாக்கெடுப்பில் பங்கேற்காமல் நடுநிலை வகித்தன.