×

மார்ச் 9ல் மதிமுக உயர்நிலை கூட்டம் வைகோ அறிவிப்பு

சென்னை: மதிமுக உயர்நிலைக் குழு கூட்டம் மார்ச் 9ம் தேதி நடைபெறும் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ அறிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிரு ப்பதாவது : மதிமுக உயர்நிலைக்குழு, மாவட்டச் செயலாளர்கள், ஆட்சிமன்றக்குழு, அரசியல் ஆலோசனைக்குழு, அரசியல் ஆய்வு மய்ய உறுப்பினர்கள், தலைமைக் கழகச் செயலாளர்கள் கூட்டம் வருகிற மார்ச் 9ம் தேதி புதன்கிழமை காலை 10 மணிக்கு சென்னை, தலைமை நிலையம் தாயகத்தில் அவைத்தலைவர் திருப்பூர் துரைசாமி தலைமையில் நடைபெறும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : Waikoloa ,Madhyamaka High Level Meeting , Waikoloa announcement of the Madhyamaka High Level Meeting on March 9th
× RELATED பேரவை தலைவர் அப்பாவு கேள்விகளுக்கு...