×

கூத்தாநல்லூர் நகராட்சி 20வது வார்டில் 3 ஓட்டு வாங்கி அதிமுக படுதோல்வி-திமுக வேட்பாளர் பாத்திமா பஷிரா அமோக வெற்றி

மன்னார்குடி : கூத்தாநல்லூர் நகராட்சி 20வது வார்டில் திமுக வேட்பாளராக போட்டியிட்ட பாத்திமா பஷிரா 338 வாக்குகள் பெற்று அமோக வெற்றி பெற்றுள்ளார். அவரை எதிர்த்து அதிமுக சார்பில் போட்டியிட்ட நசீமா பர்வீன் வெறும் 3 ஒட்டு மட்டுமே வாங்கி படுதோல்வி அடைந்தார்.திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் நகராட்சியில் மொத்தம் 24 வார்டுகள் உள்ளன. இதில் திமுக 17 வார்டுகளிலும், அதன் கூட்டணி கட்சிகளான இந்திய கம்யூ. கட்சி 2 வார்டுகளிலும், காங்கிரஸ் 1 வார்டிலும் வெற்றி பெற்றது. அதிமுக 3 வார்டுகளிலும், சுயேச்சை 1 வார்டிலும் வெற்றி பெற்றுள்ளது.

20வது வார்டில் மொத்தம் உள்ள 1,149 வாக்குகளில் 590 வாக்குகள் பதிவானது. வாக்கு எண்ணிக்கையில் திமுக வேட்பாளர் பாத்திமா பஷிரா 338 வாக்குகளும், சுயேச்சை வேட்பாளர்களான பாத்திமா சித்திக் 138, சப்னா ஜாஸ்மின் 103, பரக்கத் நிஷா 8 வாக்குகளும் பெற்றனர். அதிமுக சார்பில் போட்டியிட்ட நசீமா பர்வீன் வெறும் 3 ஓட்டுகள் மட்டுமே வாங்கி படுதோல்வி அடைந்தார். இது அதிமுகவினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Tags : AIADMK ,Fathima Bashira Amoga ,Koothanallur , Mannargudi: Fathima Bashira, who contested as the DMK candidate in the 20th ward of Koothanallur municipality, has won by a landslide with 338 votes.
× RELATED அதிமுக தேர்தல் பிரசாரத்தின்போது வாகன...