×

அவிநாசி அருகே இளம்பெண்ணை தனிமையில் சந்திக்க வரச்சொன்ன போலீசுக்கு தர்ம அடி: சஸ்பெண்ட் செய்து எஸ்பி உத்தரவு

திருப்பூர்: அவிநாசி அருகே வெள்ளியம்பாளையம் பகுதியை சேர்ந்த இளம்பெண்ணை தனிமையில் வந்து சந்திக்குமாறு செல்போனில் அழைப்பு விடுத்த போலீசக்கு உறவினர்கள் தர்ம அடி கொடுத்தனர். திருப்பூர் மாவட்டம் அவிநாசி வெள்ளியம்பாளையத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவர் நேற்று முன்தினம் மதியம் அவருடைய காதலனுடன் செல்போனில் பேசிக்கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக அவிநாசி போலீஸ் ஸ்டேஷனில் இரண்டாம் நிலை போலீஸ்காரராக பணிபுரியும் சுப்பிரமணி (38) ரோந்து வந்தார். அவர் அந்த இளம்பெண்ணிடம் விசாரணை நடத்துவதுபோல் நைசாக பேச்சுக்கொடுத்தார்.

செல்போன் எண்ணையும் வாங்கினார். அன்று மாலையில் அந்த இளம்பெண்ணை செல்போனில் அழைத்த சுப்பிரமணி, தனியாக தன்னை சந்திக்க வரும்படி கூறியதாக தெரிகிறது. இது குறித்து இளம்பெண் தனது உறவினர்களிடம் கூறியுள்ளார். பின்னர் அந்த பெண்ணின் உறவினர்கள் சுப்பிரமணி தனிமையில் சந்திக்க வரச்சொன்ன இடத்திற்கு சென்றனர். அங்கு காத்திருந்த சுப்பிரமணியை பிடித்து தர்ம அடி கொடுத்தனர். இதில் காயம் அடைந்த அவர் சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது குறித்து தகவலறிந்த மாவட்ட எஸ்பி சசாங் சாய் அதிரடி நடவடிக்கையாக, சுப்பிரமணியை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.

Tags : Dharma ,Avinashi , SP orders suspension of police officer
× RELATED சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தாத பாஜவை...