பிராயக்ராஜ்: உத்தரப் பிரதேச மாநிலம், பிராயக்ராஜில் உள்ள கேபி கல்லூரி மைதானத்தில் நேற்று நடைபெற்ற தேர்தல் கூட்டத்தில் பகுஜன் சமாஜ்வாடி கட்சி தலைவர் மாயாவதி பேசுகையில், ‘பகுஜன் சமாஜ் கட்சியின் திட்டங்களின் முழுப் பலனை ஏழைகள், தொழிலாளர்கள், தலித்துகள், பழங்குடியினர், இதர பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினருக்கு பாஜ அரசு வழங்கவில்லை. மாநிலத்தில் பாஜ ஆட்சியில் தலித்துக்கள், ஓபிசியினருக்கு இடஒதுக்கீட்டின் முழுப் பலன் கிடைக்கவில்லை,’ என்றார்.