×

தேர்தல் முடிவுகள் மக்களின் விருப்பமாக இருக்கும்: சரண்ஜித் சிங்

பஞ்சாப் சட்டமன்ற தொகுதிக்கான வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பாக பஞ்சாப் முதலமைச்சர் சரண்ஜித் சிங் சன்னி, காரர் பகுதியில் உள்ள ஸ்ரீ கடல்கர் சாஹிப் குருத்வாராவில் பிரார்த்தனை செய்தார். அவர், சம்கார் சாஹிப், பாதவுர் ஆகிய 2 தொகுதிகளிலும் போட்டியிடுகிறார். அந்த தொகுதிகளிலும் வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது. பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், ‘பஞ்சாப் மக்கள் மற்றும் அனைத்து தரப்பினரின் நலனுக்காக பிரார்த்தனை செய்ய வந்துள்ளேன்.

தேர்தலில் வெற்றி பெற தாங்கள் அனைத்து முயற்சியையும் செய்துள்ளதாகவும், தேர்தல் முடிவுகள் மக்களின் விருப்பமாக இருக்கும். இறைவனின் ஆசிர்வாதம் மற்றும் மக்களின் விருப்பத்தின் பேரில் மீண்டும் ஆட்சி அமைப்போம்’ என்றார்.

Tags : Saranjit Singh , Election results will be the will of the people: Saranjit Singh
× RELATED பஞ்சாப் மாநில புதிய முதல்வராக...