×

எடப்பாடியை இன்னும் கைது செய்யவில்லையே என்று வருத்தமாக உள்ளது: தயாநிதிமாறன் எம்பி பேட்டி

சென்னை: எடப்பாடி பழனிசாமியை இன்னும் கைது செய்யவில்லையே என்று எனக்கு வருத்தமாக உள்ளது என தயாநிதிமாறன் எம்பி கூறியுள்ளார். சென்னையில் நேற்று திமுக வேட்பாளர்களை ஆதரித்து மத்திய சென்னை தொகுதி திமுக எம்பி தயாநிதிமாறன் மற்றும் இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆகியோர் நேற்று துறைமுகம் பகுதியில் பிரச்சாரம் செய்தனர்.

அப்போது, தமிழக அரசு இதுவரையில் எதுவுமே செய்யவில்லை. எதுவுமே செய்யவில்லை என தொடர்ந்து எடப்பாடி கூறி வருகிறாரே என்று நிருபர்கள் மத்திய சென்னை எம்பி தயாநிதிமாறனிடம் கேட்டபோது, அதற்கு பதில் அளித்த அவர், ஆமாம், உண்மையிலேயே எனக்கும் வருத்தமாக இருக்கிறது. எடப்பாடியை இன்னும் கைது செய்யவில்லையே என்று எனக்கு வருத்தமாக இருக்கிறது என்றார்.



Tags : Tayanidamaran ,MB , Edappadi, arrested, Dayanidhimaran, MP interview
× RELATED 40 தொகுதிகளிலும் நிச்சயம் இந்தியா கூட்டணி வெற்றி பெறும்: முத்தரசன் உறுதி