சென்னை: தமிழகத்தில் 12 சதுப்பு நிலங்கள் குறித்த அறிவிப்பை வெளியிட தாமதம் ஏன் என காரணங்களை விளக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள சதுப்பு நிலங்களை பாதுகாப்பது தொடர்பான வழக்கில் உயர்நீதிமன்றம் கேள்வியெழுப்பியுள்ளது. பள்ளிக்கரணை, கழுவேலி தவிர்த்து மேலும் 12 இடங்களை சதுப்பு நிலமாக அறிவிக்க பரிசீலனை செய்யப்பட்டு வருவதாக மூத்த வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.