×

திருப்பதி வனப்பகுதியில் வெட்டி கடத்தல் ₹10 லட்சம் செம்மரக்கட்டைகள் பறிமுதல்-திருப்பத்தூரை சேர்ந்தவர் கைது

திருமலை : திருப்பதி வனப்பகுதியில் வெட்டி கடத்திய ₹10 லட்சம் மதிப்பு செம்மரக்கட்டைகளை பறிமுதல் செய்த போலீசார் திருப்பத்தூரை சேர்ந்தவரை கைது செய்தனர்.
ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டத்தில் உள்ள திருப்பதி பாக்ராப்பேட்டை வனப்பகுதியில் இருந்து செம்மரக்கட்டைகள் கடத்துவதாக பீலேரு போலீசாருக்கு நேற்று அதிகாலை ரகசிய தகவல் கிடைத்தது.  அதன்பேரில், இன்ஸ்பெக்டர் துளசிராமன் மற்றும் போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது, அவ்வழியாக வந்த காரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். இதில், 5 செம்மரக்கட்டைகள் இருந்தது தெரியவந்தது.  இதையடுத்து, கார் டிரைவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இதில், திருப்பத்தூர் மாவட்டத்தை சேர்ந்த சிவக்குமார் என்பதும், பாக்ராப்பேட்டை வனப்பகுதியிலிருந்து செம்மரக்கட்டைகள் கடத்தி வந்ததும் தெரியவந்தது.இதையடுத்து, ₹10 லட்சம் மதிப்புள்ள செம்மரக்கட்டைகள் மற்றும் காரை போலீசார் பறிமுதல் செய்து, சிவக்குமாரை கைது செய்தனர்.
மேலும், வழக்குப்பதிந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Tirupati forest- ,Tirupati , Thirumalai: Police have arrested a man from Tirupati who confiscated ₹ 10 lakh worth of timber smuggled in the Tirupati forest.
× RELATED திருப்பதி கோயிலில் சாமி தரிசனம்...