பெங்களூரு: கர்நாடகா மாநிலம் மாண்டியாவில் ஹிஜாப் அணிந்து வந்த மாணவிகளை பள்ளிக்குள் அனுமதிக்க மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. பள்ளிக்குள் வந்ததும் ஹிஜாப்பை அகற்றுவதாக பெற்றோர் கூறியும் அதனை ஏற்க ஆசிரியை மறுத்துவிட்டார். கடந்த வாரம் விடுமுறைக்கு பிறகு கர்நாடகாவில் 10ம் வகுப்பு வரை இன்று மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டன.