×

தேமுதிக கொடி நாள் ஏழைகளுக்கு உதவிகளை செய்து கொண்டாட வேண்டும்: தொண்டர்களுக்கு விஜயகாந்த் வேண்டுகோள்

சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்த் நேற்று வெளியிட்ட அறிக்கை: தமிழக மக்களுக்காக உயர்ந்த எண்ணத்தோடு, லட்சியத்தோடு உருவாக்கப்பட்டது தேமுதிக கொடி. இந்த லட்சியத்தை அடைய அனைவரும் ஒன்றினைந்து ஒற்றுமையாக கட்சியின் வளர்ச்சிக்கு பாடுபட வேண்டும். அதேபோல், நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் நாம் அனைவரும் ஒற்றுமையாக செயல்பட்டு, வெற்றிக்காக பாடுபட வேண்டும். நிர்வாகிகளும், தொண்டர்களும், தேர்தல் நடத்தை விதிமுறைகளுக்கு உட்பட்டு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் இடங்களை தவிர்த்து, ஊராட்சி பகுதிகளில் உள்ள ஏழை, எளிய மக்களுக்கும், மாணவ, மாணவியர்களுக்கும் தங்களால் இயன்ற உதவிகளை செய்து, கொடி நாளை கொண்டாட வேண்டும். இந்த இனிய கொடி நாளில் தொண்டர்கள் அனைவருக்கும் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

Tags : Temujin Flag Day ,Vijaykanth , Temujin Flag Day should be celebrated by helping the poor: Vijaykanth appeals to volunteers
× RELATED சகோதரருக்கு செய்யக்கூடிய மரியாதைகள்...