×

கர்நாடகாவில் ‘ஹிஜாப்’ - காவி விவகாரம்: இந்திய தலைவர்களுக்கு மலாலா கண்டனம்

லண்டன்: முஸ்லிம் பெண்களை ஓரங்கட்டுவதை இந்தியத் தலைவர்கள் நிறுத்த வேண்டும் என பெண் கல்வி செயற்பாட்டாளரான மலாலா யூசுப்சாயி தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலம் உடுப்பி அரசு கல்லூரியில் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் (முக்காடு), பர்தா (முகத்திரை), புர்கா (முழு நீள உடை) அணிந்து வருவதற்கு இந்துத்துவா அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து அங்கு ஹிஜாப் அணிய தடை விதிக்கப்பட்டது. கல்லூரிக்கு ஹிஜாப் அணிந்துவந்த மாணவி முஸ்கானை, காவி துண்டுகள் அணிந்த‌ ஏபிவிபி அமைப்பினர் சூழ்ந்து கொண்டு ‘ஜெய் ராம்’ என்று முழக்கம் எழுப்பினர்.

அந்த கூட்டத்துக்கு அஞ்சாமல் மாணவி தனியாளாக ‘அல்லாஹ் அக்பர்’ என்று முழக்கம் எழுப்பிய காட்சி சமூக வலைத்தளங்களின் வாயிலாக வைரலானது. இந்நிலையில், பாகிஸ்தானில் பெண் கல்விக்காக குரல் கொடுத்து தலிபான் தீவிரவாதிகளால் சுடப்பட்டு மீண்ட மற்றும் அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற மலாலா யூசுப்சாயி, இந்த விவகாரம் தொடர்பாக டுவிட் செய்துள்ளார். அதில் அவர், ‘கல்லூரிகள் எங்களை கல்வியா? ஹிஜாபா? என்று தேர்வு செய்யும் நெருக்கடிக்குத் தள்ளியுள்ளது.

மாணவிகள் ஹிஜாப் அணிந்து செல்ல அனுமதி மறுப்பது அச்சுறுத்தும் செயலாக உள்ளது. குறைந்த ஆடை, அதிகமான ஆடை என ஆடையின் அடிப்படையில் பெண்களை ஏதேனும் வரம்புக்குள் அடையாளப்படுத்துதல் தொடர்கிறது. பெண்களை இவ்வாறாக ஓரங்கட்டும் செயல்களை இந்தியத் தலைவர்கள் நிறுத்திக் கொள்ள வேண்டும்’ என்று பதிவிட்டுள்ளார்.

அவர்கள் முழங்கியதால்... நான் முழக்கமிட்டேன்!
மாணவி முஸ்கான் அளித்த பேட்டியில், ‘நான் என்னுடைய அசைன்மெண்டை சமர்பிப்பதற்காக கல்லூரிக்குச் சென்றேன். நான் புர்கா அணிந்திருந்த காரணத்தால், எங்கிருந்தோ வந்த சிலர் என்னை கல்லூரிக்குள் அனுமதிக்க மறுத்தனர். புர்காவை கழற்றிவிட்டு கல்லூரிக்குள் செல்லுமாறு அதிகாரத்துடன் கூறினர். நான் கல்லூரிக்குள் நுழைந்தபோது, அவர்கள் ஜெய்ராம் என முழக்கமிட்டனர். நான் கடந்து சென்றேன். அங்கு கூடிய பலரும் என்னை துரத்தினர்.

அப்போது என்னுடைய கல்லூரி முதல்வரும், ஆசிரியரும் எனக்கு ஆதரவாக நின்றனர். அவர்கள் ‘ஜெய்ராம்’ என்று முழங்கியதால், நான் ‘அல்லாஹூ அக்பர்’ என்று முழக்கமிட்டேன். அவர்களில் சிலர் விரல்களை உயர்த்தி காட்டினர். எனக்கு சிறிது பயம் ஏற்பட்டது. பின்னர் என் கல்லூரி ஆசிரியர்களை பார்த்ததும் ஆசுவாசப்படுத்திக்கொண்டேன்’ என்றார்.

Tags : Karnataka ,Kavi ,Malala , ‘Hijab’ in Karnataka - Kavi affair: Malala condemns Indian leaders
× RELATED கர்நாடகாவின் பெல்லாரி நகரில் உள்ள...