டெல்லி: சில தலைவர்கள் தங்களுடைய தொகுதியை கூட கவனிப்பதில்லை என ராகுல்காந்தி மீது பிரதமர் மோடி சாடியுள்ளார். எதிர்க்கட்சியான பிறகு நாட்டை பற்றி கவலைப்பட வேண்டாம் என சிலர் செயல்படுகின்றனர் என ராகுல்காந்தி குறித்து பிரதமர் மோடி கூறியுள்ளார். ஆட்சியில் இருந்தாலும் எதிர்க்கட்சியில் இருந்தாலும் நமது நாட்டை தரம் தாழ்த்தி விமரிசிக்க கூடாது என மோடி வலியுறுத்தியுள்ளார்.