ஆனைமலை : கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தை சேர்ந்தத பரம்பிகுளம் வனப்பகுதியில் புலிகள் அதிகம் வாழ்கின்றன. இந்த வனப்பகுதி பாதுகாக்கப்பட்ட புலிகள் காப்பகத்தில் ஒன்றாகும். ஆனைமலை புலிகள் காப்பகத்தையொட்டி உள்ள பரம்பிக்குளம் புலிகள் காப்பகம் கேரளாவில் அமைந்திருந்தாலும், அதற்கு தமிழக பகுதியான பொள்ளாச்சியை அடுத்துள்ள சேத்துமடை வழியாகவே செல்ல முடியும்.
இங்கு புலி, சிறுத்தை புலி, யானை, மான்கள் என பல்வேறு வகையான வன உயிரினங்கள் வாழ்கின்றன. இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு வாகன ஓட்டி ஒருவர், பரம்பிக்குளம் சென்றபோது, சாலையை ஒட்டி உள்ள வனத்தில், புலி ஒன்று நடந்து சென்றதை செல்போனில் வீடியோ எடுத்துள்ளார். தற்போது இந்த வீடியோ வாட்ஸ் அப், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.