திருவனந்தபுரம்: பிரபல மலையாள நடிகை பலாத்கார வழக்கை விசாரிக்கும் டிஎஸ்பி பைஜு பவுலோஸ் உள்பட போலீஸ் அதிகாரிகளை கொல்ல சதித்திட்டம் தீட்டியதாக நடிகர் திலீப் அவரது தம்பி அனூப் உள்பட 6 பேர் மீது கொச்சி குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதையடுத்து முன்ஜாமீன் கோரி திலீப் உள்பட 5 பேரும் கேரள உயர்நீதிமன்றத்தில் கடந்த மாதம் 10ம் தேதி மனு தாக்கல் செய்தனர். இதில், நடிகர் திலீப் உள்பட 5 பேருக்கும் நீதிபதி கோபிநாத் முன் ஜாமீன் வழங்கி நேற்று உத்தரவிட்டார். நீதிபதி தனது உத்தரவில், ‘சதி திட்டத்தை நிரூபிக்க போதிய ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட வில்லை. ஒரு போனை ஆஜர்படுத்தாததில் தவறு இல்லை. அனைவரும் விசாரணைக்கு போலீசாருக்கு ஒத்துழைக்க வேண்டும். மீறினால் ேபாலீசார் நீதிமன்றத்தை அணுகலாம்’ என்றார். நீதிமன்ற உத்தரவை ெதாடர்ந்து உச்சநீதிமன்றத்தை அணுக போலீஸ் தரப்பில் தீர்மானத்துள்ளதாக கூறப்படுகிறது.