×

கடும் கோபத்தில் நாகம் கடித்ததால் 65 விஷ முறிவு பாட்டில்கள் பயன்படுத்தப்பட்டது; இனி தகுந்த உபகரணங்களுடன் பாம்பு பிடிப்பேன் வாவா சுரேஷ் உறுதி

திருவனந்தபுரம்: நல்லபாம்பு கடித்து உயிருக்கு போராடிய வாவா சுரேசுக்கு 65 விஷமுறிவு மருந்து பாட்டில்கள் பயன்படுத்தப்பட்டது. தற்போது அவரின் உடல்நிலை தேறிவிட்டது. பிரபல பாம்புப்பிடி மன்னனான வாவா சுரேஷை நல்லபாம்பு கொத்தியதில் உயிருக்கு போராடி வந்தார். கோட்டையும் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். பொதுவாக நல்லபாம்பு விஷத்தை அவ்வளவாக கடிப்பவர்கள் மீது செலுத்தாது; ஆனால் வாவா சுரேஷை கடும் கோபத்துடன் கடித்ததால் விஷம் அதிகளவு அவரின் உடலில் செலுத்தியுள்ளது. இதனால் அவரின் ரத்தத்தில் விஷம் நன்றாக கலந்து விட்டது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதிலிருந்து அவருக்கு தொடர்ந்து விஷமுறிவு மருந்து பாட்டில்கள் ஏற்றப்பட்டன. சாதாரணமாக 25 பாட்டில்கள் ஏற்றினாலே விஷம் முறிந்துவிடும். ஆனால் வாவா சுரேஷின் உடலில் எந்த ஒரு முன்னேற்றமும் இல்லாததால், தொடர்ந்து விஷமுறிவு மருந்து ஏற்றப்பட்டுக்கொண்டே இருந்தது.

வாவா சுரேசுக்கு 65 விஷமுறிவு பாட்டில்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. கோட்டயம் அரசு மருத்துவமனையில் மனிதர் ஒருவருக்கு இதனை விஷமுறிவு மருந்து செலுத்தப்பட்டது இதுவே முதன்முறையாகும். தற்பொழுது முழுமையாக தேறிவிட்டார். சாதாரணமாக எழுந்து நடமாட அவரால் முடிகிறது. தன்னை காப்பாற்றிய மருத்துவர்களுக்கு வாவா சுரேஷ் நன்றி தெரிவித்தார். இனிமேல் பாதுகாப்பு உபகரணங்களுடன் பாம்புகளை பிடிக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அவருக்கு அறிவுறுத்தி உள்ளனர். அதை வாவா சுரேசும் ஏற்றுக்கொண்டுள்ளார். இனிமேல் தகுந்த உபகரணங்களுடன் பாம்பை கையாள போவதாக உறுதியளித்துள்ளார். தன்னை பாம்பு கடித்தபோது முதலில் கண் இருட்டிக் கொண்டு வந்ததாகவும், இனிமேல் தான் உயிருடன் திரும்பப்போவதில்லை என்றும் கருதியதாகவும் கூறினார். விரைவில் மருத்துவமனையில் இருந்து வீட்டுக்கு செல்வதாக கூறினார்.                


Tags : Wawa Suresh , Nagam, 65, poison break, bottle, equipment, snake, Vava Suresh
× RELATED கேரளாவில் நாகபாம்பு கடித்ததால்...